பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி - ஜெகத்ரட்சகன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-10 02:48 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்கு பிறகு, இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை என குற்றம்சாட்டினார். ஊரடங்கால் சிறு, குறு தொழில்கள் முடங்கியதாக குறிப்பிட்ட அவர், சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்