ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவின் நோடல் அதிகாரியாக கோவை கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை இயக்குனர்கள், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குனர்கள், விலங்குகள் நலவாரிய மருத்துவர் உள்ளிட்ட பலர் அக்குழுவில் கவுரவ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா பிறப்பித்துள்ளார். கண்காணிப்பு குழு செயல்படுவதற்கு கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி.க்கு இந்திய
விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளது.