சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

Update: 2021-01-03 10:13 GMT
ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எழுத்தறிவிப்பதே பாராட்டுக்கு உரியது என்றும், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில், இளைஞர்கள் இறங்கியிருப்பது போற்றுதலுக்கு உரியது என்றும் கூறி உள்ளார்.  சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாக இளைஞர்கள் திகழ்வதாகவும் டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்