உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-22 08:46 GMT
தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,   திமுக கொடுத்த புகார்களில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லையென கூறினார். மேலும், இதுதொடர்பான 97 பக்க ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கி, நடவடிக்கை உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்