ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - உதவி தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என புகார்

உதவி தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என கோரி 500க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2020-11-17 13:27 GMT
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி , கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படாததை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட 500க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இருப்பதாக அறிவித்திருந்த அவர்களிடம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்   பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,  அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் படி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்