பாமக தலைவர்களின் படங்கள் அவமதிப்பு - போராட்டம்

சென்னை பூந்தமல்லி அருகே, பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-15 11:38 GMT
சென்னை பூந்தமல்லி அருகே, பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில், பாமக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ராமதாஸ், ஜிகே மணி, காடுவெட்டி குரு ஆகியோரது உருவ படங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 3 பேரின் உருவ படங்கள் மீதும் மர்ம நபர்கள் சிலர் சாணி பூசியுள்ளனர். இதை கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்