"ஊசி போட்டதால் தாய் மரணம்" - மருத்துவர்கள் மீது மகன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி அருகே ஊசி போட்டதால், அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருந்த பெண் நோயாளி இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2020-10-05 07:58 GMT
குழித்துறையைச் சேர்ந்த ஐம்பது வயது சந்திரிகா, ரத்த சோகை குறைபாடு காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று வீடு திரும்ப இருந்த நிலையில், அந்த பெண்ணுக்கு செவிலியர் ஊசி போட்டுள்ளார். சில வினாடிகளில் சந்திரிகா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பதறிப்போன அந்த பெண்ணின் மகன் அனீஸ், தனது தாய் இறப்பிற்கு மருத்துவமனையில் அலட்சியமே காரணம் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 



Tags:    

மேலும் செய்திகள்