ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்கு : கோவை நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-04 03:45 GMT
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கொடி போன்று உருவாக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டதாக கூறி, ஆட்சியர், காவல்துறை ஆணையர் உட்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில்,  அர்ச்சனா பட்நாயக்,  பிரவேஷ்குமார் ஆகியோர்  மீது வழக்குப் பதிவு செய்ய கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்