வீட்டின் அருகே கதவு அமைப்பதில் தகராறு: "அடியாட்களுடன் சென்று தாக்குதல்" - அதிமுக, திமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை திருவிக நகரில் வசித்து வரும் அதிமுக வட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்திரி என்பவருக்கும் இடையே வீட்டின் அருகில் கேட் அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-04 03:22 GMT
சென்னை திருவிக நகரில் வசித்து வரும் அதிமுக வட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்திரி  என்பவருக்கும் இடையே வீட்டின் அருகில் கேட் அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காயத்திரியின் மருமகன் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சிலர்,  ராமச்சந்திரனின் தம்பியும் கொளத்தூர் பகுதி திமுக இளைஞரணி துணை தலைவருமான தனசேகர்  கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் தனசேகரன் மீது திருவிக நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்