"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

Update: 2020-09-24 08:25 GMT
பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சலீம் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,. இந்த நிலையில் அவர் கொரோனா தொற்று பாதித்து இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம்,. இந்நிலையில் சலீமின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்,. இதனையடுத்து சலீமின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக, தோண்டி எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது,. இதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,.

Tags:    

மேலும் செய்திகள்