கொரோனா தடுப்பு பணி ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனப் புகார் - பா.ம.க தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகின்றனர்.

Update: 2020-09-24 05:26 GMT
மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட 80வது வார்டியில் பணி செய்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் மண்டல அலுவலகத்தை பா.ம.க தலைமையில் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்