உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-09-24 03:02 GMT
உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 21 ஆம் தேதி அவர் எழுதியுள்ள கடித‌த்தில், உளுந்தூர் பேட்டை எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கோவில் இங்கு அமைந்தால், புதுவை, திருவண்ணாமலை, பழனி, மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களும்
வந்து செல்ல போக்குவரத்து வசதியும் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே அந்த இடத்தில் வெங்கடாசலபதி கோவில் கட்டி நிர்வகிக்க தேவையான அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்