ஸ்ரீவைகுண்டம் இளைஞர் கொலை வழக்கு : காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்? - கனிமொழி கேள்வி

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வன், கொலைக்கு உடந்தையாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

Update: 2020-09-21 10:32 GMT
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வன், கொலைக்கு உடந்தையாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது எனக் கூறியுள்ள கனிமொழி, உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்