"அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம்" - அமைச்சர் அன்பழகன்

அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-16 12:09 GMT
அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு பணம் செலுத்திய அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழக அரசுக்கு ஏ.ஐ.சி.டி.இ எந்த கடிதமும் எழுதவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்