"கொரோனா மரணங்கள், உண்மைத் தகவலை வெளியிடுங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா மரணங்கள் குறித்து உண்மைத் தகவலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-05 17:16 GMT
கொரோனா மரணங்கள் குறித்து உண்மைத் தகவலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் ஸ்டாலின், நெல்லையில் கொரோனாவால் 285 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது , ஆனால் அரசோ 182 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே உண்மை தகவலை மக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.   
Tags:    

மேலும் செய்திகள்