11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரம் - மாஃபா பாண்டியராஜன், நட்ராஜ் எம்.எல்.ஏவை விசாரிக்க முடிவு

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரம் - மாஃபா பாண்டியராஜன், நட்ராஜ் எம்.எல்.ஏவை விசாரிக்க முடிவு

Update: 2020-09-05 05:00 GMT
அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்த விவகாரத்தில், கடந்த 27 ஆம் தேதி காணொலி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாஃபா பண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்ய தன்னை அனுமதிக்க கோரி பார்த்திபன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனு  தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். 11 உறுப்பினர்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட  மற்ற உறுப்பினர்களிடம் எப்போது விசாரணை என்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்