டாஸ்மாக் வசூல் - ஒரே நாளில் ரூ.248 கோடி

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

Update: 2020-08-15 15:20 GMT
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை முழு ஊரடங்கு என்பதால் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நேற்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில், 56 கோடியே 45 லட்சத்திற்கு மது விற்பனையாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 55 கோடியே 77 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்