எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2020-08-14 08:26 GMT
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ரத்தத்தில் உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான ஆக்ஸிஜன்  இருப்பதாகவும்   கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்