கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி

கொரோனாவால் உயிரிழந்த சென்னை ஆயுதப் படையை சேர்ந்த காவலர் நாகராஜன் குடும்பத்தினருக்கு,16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய், 2013 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்.

Update: 2020-08-10 16:33 GMT
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே அம்மாபட்டியை சேர்ந்த 32 வயதான நாகராஜன், சென்னையிலுள்ள ஆயுதப்படையில் காவலாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில்,  மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.  வறுமையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில், 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக பேட்ஜ் காவலர்கள், சமூக வலைத்தளம் மூலம், 16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயை வசூல் செய்து, வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்