கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2020-08-09 04:00 GMT
எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கே.கே. நகர் இ.எஸ்.ஐ.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இறந்துவிடுவோமா என்ற பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி தனது மகளை பார்க்க, ஆட்டோ மூலம் நெய்வேலி புறப்பட்ட முயன்றார். இதனிடையே, மூதாட்டி குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவருடைய மகளுக்கு தெரித்துள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி, ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண் மூலம் மகளை தொடர்பு கொள்ள, மகளோ எம்ஜிஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டு  தன் தாய் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். பின்னர், போலீசார், ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொள்ள அவர்,  மூதாட்டியிடம்  சாதுரியமாக பேசி  போலீசாரிடம் ஒப்படைத்தார். மீண்டும், சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மூதாட்டியை, காவல்துறையினர் இஎஸ்ஐ  புறநகர் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்