வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-08-06 16:21 GMT
வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் நாளை நடைபெற உள்ள முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளிவந்த நிலையில் அதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து,   அவர், தம்மை கொரோனா சிகிச்சை முகாமில் இணைத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்