கேரளா தங்க கடத்தல் - தமிழகம் நோக்கி திரும்பியுள்ள விசாரணை

கொரோனாவுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா தங்க கடத்தல் குறித்து விசாரணை செய்துவரும் தேசிய புலனாய்வு அமைப்பின் பார்வை தற்போது தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.

Update: 2020-08-01 16:26 GMT
தங்க கடத்தல் குறித்து விசாரிக்க, டெல்லியிலிருந்து என்.ஐ.ஏ. பெண் அதிகாரி டிஐஜி வந்தனா தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளிடம். விசாரணை நடத்தி வரும் அவர்கள், கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பெரிய அளவில் கடத்தப்பட்ட தங்கம் மற்றும் விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கம் உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும்,  தங்க கடத்தல் வழக்குகளில்  கைதானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, இந்த கடத்தல் சம்பவங்களுக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்