தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை தொடர்ந்து சென்னையில் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டம்

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை தொடர்ந்து சென்னையிலும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Update: 2020-07-30 02:58 GMT
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வழியாக தங்க கடத்தலில் ஸ்வப்னா ஈடுபட்டிருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை, திருச்சி விமான நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்க கடத்தல் சம்பவங்களில் கைதானவர்கள் பற்றிய தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் தங்கம் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இங்கு விசாரணை நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் இங்கு வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்