கொரோனா பரவலைத் தடுக்க திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் - 18 வகையான மூலிகை பொருட்களை திருடிய திருடன்

கொரோனா பரவலை தடுக்க திருட்டில் ஈடுபட்ட சம்பவம் - இப்படியொரு திருட்டா? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Update: 2020-07-24 03:02 GMT
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியிலுள்ள  கடையின் பூட்டை உடைத்து, 5 ஆயிரம் ரூபாயை திருடிய திருடன், கடையில் இருந்த 18 வகையான மூலிகை பொருட்களையும் திருடி உள்ளார். திருடிய பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருடனைப் பிடித்து போலீசார் விசாரித்ததில் கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார். திருட்டில் ஈடுபட்டவரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவே 18 வகையான மூலிகை மருந்துகளை திருடியதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்