ராதாபுரம் கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை : விவசாயிகள் சார்பில் நெல்லை எம்பி வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2020-07-22 11:03 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு  கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.இந்த கால்வாயில் இருந்து கடந்த 15ம் தேதி 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், ராதாபுரம் தாலுகாவில் வறண்டு கிடக்கும் 52 குளங்களும் நிரம்பும் வகையில், 75 கன அடி தண்ணீருடன் கூடுதலாக 50 கன அடிதண்ணீர் சேர்த்து 125 கன அடி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் சார்பில் நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்