இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மர்ம நபர் - மனநலம் பாதிக்கப்பட்டவரின் வினோத செயலால் மக்கள் பீதி

தூத்துக்குடி அருகே இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்மநபரால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Update: 2020-07-11 02:54 GMT
முத்தையாபுரம் அருகே உள்ள மகாநகர், அபிராமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதுகுறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த மர்மநபர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்ததை அடுத்து, குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்