தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-10 17:23 GMT
தமிழகம் முழுவதும் 51 காவல்துறை உயரதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார். சென்னை அடையாறு உதவி ஆணையர் பகலவன், பணிமாற்றம் செய்யப்பட்டு கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாதவரம் உதவி ஆணையர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் பத்ரி நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணைய பாலாஜி சீனிவாசன்,  புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் நகர சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தங்கதுரை ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் குற்றங்கள் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை, மயிலாப்பூர் உதவி ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்