கொரோனா பாதிப்பு : "தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-07 02:15 GMT
கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்க்கால நடவடிக்கைகளால் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார். கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்தார்.  கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கண்காணிப்பு அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும்  அமைச்சர்  
எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்