போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு - வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

இருசக்கர வாகனத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Update: 2020-07-06 12:04 GMT
இருசக்கர வாகனத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.  சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர்  உத்தரவிட்டும்  போலீசார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என அதில் தெரிவித்திருந்தார்,. இதனை விசாரித்த நீதிமன்றம், சங்கரன்கோவில் காவல் நிலையத்தை தவிர்த்து வேறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தது,. மேலும், இந்த வழக்கை டிஎஸ்பி விசாரிக்கவும் தென்காசி எஸ்பி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது

Tags:    

மேலும் செய்திகள்