வெளுத்து வாங்கிய மழையில் திடீரென பற்றி எரிந்த மரம்... - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-07 08:51 GMT

கோவையில் இடி மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கோவையில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு நேற்றிரவு காந்திபுரம், உக்கடம், பந்தய சாலை, டவுன்ஹால், ராமநாதபுரம், புலியகுளம், செல்வபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. செல்வபுரம் பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்