7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பல்வேறு கட்சியினர், அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2020-07-03 02:17 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை வாங்க மறுத்து, நீதி கேட்டு ஏம்பல் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக  இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்