போலீஸ் என காரில் ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் கடத்தல் - சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேர் கைது

காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் கடத்திய சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேரை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

Update: 2020-06-30 10:27 GMT
சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்த போலீசார் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் விலை உயர்ந்த மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் படப்பை பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கலைச்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஆனந்தராஜ் ஆகியோர் மதுபானங்களை கடத்தியது தெரியவந்தது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், 240 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்