வாகன உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் - தமிழக அரசு உத்தரவு
போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி செலுத்த கூடுதல் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில், வாகன பதிவை புதுப்பித்தல், சாலை வரிகளை செலுத்துதல் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டது. வாகனங்களை புதுப்பிக்க முடியாமல் தவித்த வாடகை வாகன உரிமையாளர்கள், அதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். கடந்த பிப்ரவரியில் முடிவடைந்த வாகன உரிமங்கள், செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து முதல், மேக்சி கேப் சரக்கு வாகனம் வரை வாடகை வாகனங்களின் வரிசை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.