மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை - தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்

புதுக்கோட்டை அருகே குடிபோதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-27 09:16 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேல்நிலைப்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மகன் அருண்குமார். வேலைக்கு செல்லாமல் இருந்த அருண்குமார், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் மகன் திருந்தாததால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், கட்டையால் மகனை அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையத்து தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்