வட்டித் தொழில் செய்து வருபவர் கடத்தல் - 50 பேரிடம் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, வட்டித்தொழில் செய்து வருபவரை மிளகாய்ப்பொடி தூவி கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-06-27 04:05 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, வட்டித்தொழில் செய்து வருபவரை மிளகாய்ப்பொடி தூவி கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
தவமணி என்பவர் கடத்தப்பட்ட  நிலையில், இது குறித்து கந்தர்வ கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, போலீசார் 4 தனிப்படைகள் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடத்தப்பட்ட தவமணியின் தொலைபேசியில் இருந்து, அவரது மகளுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், இதுவரை 50 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்