திடீரென காரை நிறுத்திவிட்டு இறங்கிய முதலமைச்சர் சிறுவர், சிறுமியரிடம் உரையாடல்
சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி திருவாச்சி என்ற கிராமத்தில் முக கவசம் அணியாமல் நின்ற மக்களுக்கு அறிவுரை கூறினார்.
சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி திருவாச்சி என்ற கிராமத்தில் முக கவசம் அணியாமல் நின்ற மக்களுக்கு அறிவுரை கூறினார். திடீரென காரை நிறுத்தி, இறங்கிய முதலமைச்சரை கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் கல்வி குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுரை கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்