"எனக்கு நம்பிக்கையே இல்லை" - வேதனையோடு சொன்ன PTR

Update: 2024-05-02 05:01 GMT

இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை சட்டத்துக்கு புறம்பாக, மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது என்று கூறினார். இந்தியா- இலங்கை இடையே மேம்பாலம் கட்ட அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது என்றும், அது இரு நாட்டு அரசுகளின் கையில்தான் உள்ளது என்றும் கூறினார். மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை தமிழகம்- இலங்கை இடையே வர்த்தக கலாச்சார உறவை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜக அரசு கையில் எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்