கொரோனா தடுப்பு நடவடிக்கை - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதில்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-24 17:48 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வதாக கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதலின் படி முதலமைச்சர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, தொற்று பரவை தடுக்க, நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். பொய் புரட்டிலான செய்தியை வைத்துக்கொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின், அரசை விமர்சித்து வருவதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து கொண்டு விமர்சித்து வரும் ஸ்டாலின்,அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை தெரிந்து கொண்ட பின், அறிக்கைகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்