ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜானிகிராமன், நாகராஜ், சந்திரன் ஆகியோரை போலீசாரை கைது செய்துள்ளனர்.