ஜெயராஜ்,பென்னிக்ஸ் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் - விஜயகாந்த், திருமாவளவன், ராமதாஸ் கண்டனம்

சிறையில் தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு, விஜயகாந்த், திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-06-24 02:14 GMT
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைக்கு மட்டும் அழைத்துச் சென்றவர்களை, கொல்வதற்கு எந்த காவல்துறைக்கும் அதிகாரமில்லை என கூறியுள்ளார். சாத்தான்குளம் காவலர்களின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த காவல்துறை மீது, தமிழக அரசு கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 
தவறு செய்த காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது, கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்