விமான நிலைய நிர்வாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது - அதிகாரி, ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பால் நடவடிக்கை
சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் மின்சார பராமரிப்பு பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் மின்சார பராமரிப்பு பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா். கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதால் விமான நிலைய நிா்வாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னை விமான நிலைய ஆணையரக அலுவலகத்தில் பணியுரியும் ஓட்டுனர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால், அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்