தமிழகத்தில் தொழில் துவங்க 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

உலகளவில் முன்னணியில் உள்ள 11 மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-06-04 17:04 GMT
உலகளவில் முன்னணியில் உள்ள 11 மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் அவர் பட்டியலிட்டுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், தேவையான ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் கடிதத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்