மருத்துவ படிப்பு - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

அகில இந்திய மருத்துவ கல்வி தொகுப்பில், 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-06-03 12:22 GMT
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மருத்துவ படிப்பு 15 சதவீதம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு 50 சதவீதம் இடங்களை மத்திய அரசின் தொகுப்பு ஒதுக்குவதாக அதில் கூறப்பட்டுள்ளது.  அப்படி ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஓபிசி, பிசி மற்றும் எம்பிசி ஆகிய பிரிவு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதலே ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் மத்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதி இதுவரை அமல்படுத்தவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்