கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவம் - அழகருக்கு மஞ்சள் நீராட்டு பூஜை

மதுரை கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Update: 2020-06-03 10:42 GMT
மதுரை கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் அலங்கார பல்லக்கில் எழுந்தருளி பிரகாரத்தை சுற்றி, வசந்த மண்டபத்தை வந்தடைந்தார்.  அங்கு  சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை நடைபெற்றது. சமூக விலகலுடன் கோயில் ஊழியர்கள் மட்டும் இந்த பூஜையில் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்