உறவினர்கள் 50 பேருடன் நடைபெற்ற திருமணங்கள்

அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமண விழாக்களில் உறவினர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

Update: 2020-06-01 13:27 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் நரசிம்ம சுவாமி கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதேபோல் காவல்பட்டி கிராமத்தை சேர்ந்த லாவண்யா என்பவருக்கும் திருப்பாலைவனம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருப்பாலைவனம்  திருப்பாலீஸ்வரர் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி இந்த திருமண விழாக்களில் உறவினர்கள் 50 பேர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்