"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"
தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்த் தொற்றைத் தவிர்க்க, பயணிகள் உணவுப்பொருள்களை, தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.