ஊரடங்கு நீட்டிப்பு -ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நாளை வெள்ளி கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2020-05-28 17:27 GMT
வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நாளை வெள்ளி கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். ஆலோசனையின்போது, மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்கள் விவரிக்க உள்ளதான கூறப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். எனவே, ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்