பல்கலை. உதவி பேராசிரியருக்கு கொரோனா - மனைவி, மகள் உட்பட 3 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர், அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

Update: 2020-05-28 08:11 GMT
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும்  உதவி பேராசிரியர், அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி, மகளுக்கும், மற்றொரு குடியிருப்பைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து, பல்கலைகழக வளாக ஊழியர் குடியிருப்பில் கொரோனா அறிகுறி  உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்