ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் கருத்து கேட்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - மருத்துவ நிபுணர் குழு இடையிலான முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2020-05-26 07:58 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நீட்டிக்கப்பட்ட 4ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா, நோய் தொற்றை கட்டுப்படுத்த வேறென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்