கோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் - எளிமையாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள்

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பு ஒரே நாளில் 38 திருமணங்கள் நடைபெற்றன.

Update: 2020-05-25 03:39 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கோயில்கள் வழிபாட்டு தளங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கோயில் பூட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் கோயில் வாசல் முன்பு திருமணம் செய்து கொண்டனர். தாலி கட்டுதல் மெட்டி போடுதல் உள்ளிட்ட திருமண வைபவங்கள் எளிமையாக நடைபெற்றன. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள்  சிலர் மட்டும் கலந்து கொண்டு 
புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்